டிட்வா பேரழிவால் பாதிக்கப்பட்ட தொழில்முயற்சியாளர்களுக்கு புதிய கடன் திட்டம்!

அண்மைய டிட்வா பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறையை மீளவும் முனைப்பாக ஆரம்பிப்பதற்கு கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இதற்கமைய, ‘மீள ஆரம்பிப்பதற்கான கடன் திட்டம்’ (RE – MSME Disaster Relief) மற்றும் ‘மீளமைத்தலுக்கான கடன் திட்டம்’ (EDR) ஆகிய இரண்டு கடன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இந்தக் கடன் திட்டங்களை 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்துவதற்காக 10,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக மீட்சியடையச் செய்யும் நோக்கில் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தக் கடன் திட்டங்கள் திருத்தப்பட்டுத் தீவிரமாகச் செயற்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, 15 பங்காளி நிதி நிறுவனங்களின் உதவியுடன், டிட்வா பேரழிவினால் பாதிக்கப்பட்ட 3,968 தொழில்முயற்சியாளர்களுக்கு 8,061.4 மில்லியன் ரூபாய்களை வழங்குவதற்குக் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கடன் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த தகவல்களை அமைச்சரவை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.




