LATEST
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தீவிர கண்காணிப்பில்! உலக எரிபொருள் விலை உயர்வு; உள்நாட்டு விலையிலும் மாற்றம் சாத்தியம்! 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து! தொடர் மழையால் மகாவலி கங்கை தாழ்நிலங்களுக்கு எச்சரிக்கை! நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை மற்றும் பலத்த காற்று! பாதுகாப்பற்ற சாலைகளை மாற்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் புதிய ஒப்பந்தம்! தொடரை இழந்த இலங்கைக்கு இன்று இறுதி T20 சவால்! அனோஜன் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் அவசர முயற்சியில்! ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தீவிர கண்காணிப்பில்! உலக எரிபொருள் விலை உயர்வு; உள்நாட்டு விலையிலும் மாற்றம் சாத்தியம்! 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து! தொடர் மழையால் மகாவலி கங்கை தாழ்நிலங்களுக்கு எச்சரிக்கை! நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை மற்றும் பலத்த காற்று! பாதுகாப்பற்ற சாலைகளை மாற்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் புதிய ஒப்பந்தம்! தொடரை இழந்த இலங்கைக்கு இன்று இறுதி T20 சவால்! அனோஜன் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் அவசர முயற்சியில்!
உள்ளூர்

மழையுடன் பலத்த காற்றும் மின்னலும் – மக்கள் அவதானம்!

September 19, 2026 · National Tamil LK

இன்று (19) முதல் அடுத்து வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமையில் உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

ஊவா மாகாணத்திலும் முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

Explore More ›