LATEST
நாமல் ராஜபக்ஷ இன்று ஆணைக்குழுவில் முன்னிலை! 50 மி.மீ.க்கும் அதிகமான மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! நிலக்கரி கப்பல்கள் வந்ததும் மின் உற்பத்தி சீராகும்! கெஹல்பத்தர பத்மேவுக்கு மீண்டும் விளக்கமறியல்! ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தரப்பினரின் 14 மனுக்கள் விசாரணைக்கு! பிரதமர் ஹரிணியின் பூட்டான் விஜயத்தில் முக்கிய சந்திப்பு! ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்றமா? நுளம்பு பெருக்கம் அதிகரித்தால் டெங்கு நோயாளர்கள் உயரும்! நாமல் ராஜபக்ஷ இன்று ஆணைக்குழுவில் முன்னிலை! 50 மி.மீ.க்கும் அதிகமான மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! நிலக்கரி கப்பல்கள் வந்ததும் மின் உற்பத்தி சீராகும்! கெஹல்பத்தர பத்மேவுக்கு மீண்டும் விளக்கமறியல்! ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தரப்பினரின் 14 மனுக்கள் விசாரணைக்கு! பிரதமர் ஹரிணியின் பூட்டான் விஜயத்தில் முக்கிய சந்திப்பு! ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்றமா? நுளம்பு பெருக்கம் அதிகரித்தால் டெங்கு நோயாளர்கள் உயரும்!
உள்ளூர்

50 மி.மீ.க்கும் அதிகமான மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

September 4, 2026 · National Tamil LK

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று (04) பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. 

இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் 07 வரை இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. 

இதற்கமைவாக, இன்று (04) நண்பகல் 12.09 மணிக்கு நிட்டம்புவ, அல்கம, மல்வானை, அரநாயக்க, மீகஹாகிவுல உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›