புலமைப்பரிசில் பெறுபேறுகள் விரைவில் வெளியாகும்!

2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் முடிவுகளை, ஒரு மாத காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் திருத்தும் நடவடிக்கை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இம்முறை ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நேற்று (09) இடம்பெற்றது.
இதில் 2 இலட்சத்துக்கு 94 ஆயிரத்து 89 மாணவர்கள் தோற்றி இருந்தனர்.
சிங்கள மொழி மூலம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 366 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 73 ஆயிரத்து 723 மாணவர்களும் பரீட்சையில் தோற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது
Follow & Share




