கொழும்பு – காலி வரையிலான புதிய பேருந்து சேவை ஆரம்பம்!

பயணிகளின் வசதிக்காக கொழும்பு பெஸ்டியன் மாவத்தையிலிருந்து காலி வரையிலான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக புதிய பேருந்து சேவை எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும், இந்தப் புதிய பேருந்து சேவைக்கான நேர அட்டவணைகள் மற்றும் ஏனைய விபரங்கள் விரைவில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow & Share




