LATEST
இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு 6.591 பில்லியன் டொலராக உயர்வு! மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை –கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்! மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஆபத்து – இரண்டு கடற்பகுதிகளுக்கு விசேட எச்சரிக்கை! அங்காடிகளுக்கு விநியோகிக்கப்பட்ட டின் மீன்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்! நாட்டில் தீவிரமடையும் டெங்கு – 89,033 பேருக்கு பாதிப்பு! இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் – இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு 2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆரம்பம் – மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! சம்பள உயர்வு இல்லை என திட்டவட்டமாக கூறிய பிரதி அமைச்சர்! இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு 6.591 பில்லியன் டொலராக உயர்வு! மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை –கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்! மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஆபத்து – இரண்டு கடற்பகுதிகளுக்கு விசேட எச்சரிக்கை! அங்காடிகளுக்கு விநியோகிக்கப்பட்ட டின் மீன்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்! நாட்டில் தீவிரமடையும் டெங்கு – 89,033 பேருக்கு பாதிப்பு! இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் – இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு 2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆரம்பம் – மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! சம்பள உயர்வு இல்லை என திட்டவட்டமாக கூறிய பிரதி அமைச்சர்!
உள்ளூர்

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை –கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!

August 9, 2026 · National Tamil LK

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 

இதற்கமைய, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டருக்கும் அதிகமாக வீசக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். 

எனவே, மறுஅறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்படுகின்றது. 

மட்டக்களப்பு, திருகோணமலை, கங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் காலியிலிருந்து மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, இந்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 

கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அவ்வேளைகளில் அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக் கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளன. 

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகளை அவதானிப்பில் கொள்ளுமாறு கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினர் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories

Explore More ›