LATEST
இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு 6.591 பில்லியன் டொலராக உயர்வு! மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை –கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்! மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஆபத்து – இரண்டு கடற்பகுதிகளுக்கு விசேட எச்சரிக்கை! அங்காடிகளுக்கு விநியோகிக்கப்பட்ட டின் மீன்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்! நாட்டில் தீவிரமடையும் டெங்கு – 89,033 பேருக்கு பாதிப்பு! இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் – இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு 2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆரம்பம் – மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! சம்பள உயர்வு இல்லை என திட்டவட்டமாக கூறிய பிரதி அமைச்சர்! இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு 6.591 பில்லியன் டொலராக உயர்வு! மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை –கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்! மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஆபத்து – இரண்டு கடற்பகுதிகளுக்கு விசேட எச்சரிக்கை! அங்காடிகளுக்கு விநியோகிக்கப்பட்ட டின் மீன்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்! நாட்டில் தீவிரமடையும் டெங்கு – 89,033 பேருக்கு பாதிப்பு! இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் – இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு 2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆரம்பம் – மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! சம்பள உயர்வு இல்லை என திட்டவட்டமாக கூறிய பிரதி அமைச்சர்!
உள்ளூர்

நாட்டில் தீவிரமடையும் டெங்கு – 89,033 பேருக்கு பாதிப்பு!

August 8, 2026 · National Tamil LK

நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பதிவான மொத்த நோயாளர்களில் 52.94% அதாவது 47,136 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அங்கு 18,922 நோயாளர்கள் (21.25%) பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 17,679 நோயாளர்களும் (19.86%), கண்டி மாவட்டத்தில் 6,298 நோயாளர்களும் (7.07%) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தவிர, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் 3,569 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன், கடந்த ஜூலை மாதத்தில் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,973 ஆகும்.

இதேவேளை, ஆகஸ்ட் மாதத்தின் முதல் 7 நாட்களில் மட்டும் 3,686 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், 119 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை சுகாதாரப் பிரிவினர் தொடர்ந்து டெங்கு அதி-அபாய வலயங்களாகப் பெயரிட்டுள்ளனர்.

Related Stories

Explore More ›