LATEST
இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு 6.591 பில்லியன் டொலராக உயர்வு! மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை –கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்! மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஆபத்து – இரண்டு கடற்பகுதிகளுக்கு விசேட எச்சரிக்கை! அங்காடிகளுக்கு விநியோகிக்கப்பட்ட டின் மீன்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்! நாட்டில் தீவிரமடையும் டெங்கு – 89,033 பேருக்கு பாதிப்பு! இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் – இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு 2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆரம்பம் – மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! சம்பள உயர்வு இல்லை என திட்டவட்டமாக கூறிய பிரதி அமைச்சர்! இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு 6.591 பில்லியன் டொலராக உயர்வு! மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை –கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்! மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஆபத்து – இரண்டு கடற்பகுதிகளுக்கு விசேட எச்சரிக்கை! அங்காடிகளுக்கு விநியோகிக்கப்பட்ட டின் மீன்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்! நாட்டில் தீவிரமடையும் டெங்கு – 89,033 பேருக்கு பாதிப்பு! இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் – இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு 2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆரம்பம் – மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! சம்பள உயர்வு இல்லை என திட்டவட்டமாக கூறிய பிரதி அமைச்சர்!
உள்ளூர்

அங்காடிகளுக்கு விநியோகிக்கப்பட்ட டின் மீன்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

August 8, 2026 · National Tamil LK

இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி பன்னல, எலபடகம பகுதியில் இயங்கி வந்த டின் மீன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (7) முற்றுகையிட்டது. 

நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதன் போட்டித் திறன் மேம்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது சுமார் 15 லட்சம் ரூபா பெறுமதியான டின் மீன் கையிருப்பு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. 

இந்த இடத்தில் தயாரிக்கப்படும் டின் மீன்கள் சிறப்பு அங்காடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தயாரிப்பு திகதியைக் குறிப்பிடாமை, அந்த டின் மீன்களைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் விநியோகித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் டின் மீன் கையிருப்பும் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›