LATEST
பெரிய சூரிய மின் அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு! குழந்தைகள் பாதுகாப்பு விவகாரம் – மெட்டாவுக்கு பெரும் சிக்கல்! திபெத் முதல் நேபாளம் வரை பேரிடரின் கோரத்தாண்டவம்! பேரவெள்ளத்தால் பாரிய உட்கட்டமைப்பு சேதம்! இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! ரோபோக்களின் வேகம் மனிதர்களை மிஞ்சுகிறதா? இலங்கை விளையாட்டு வரலாற்றில் முதல்முறை – பயிற்சியாளர்களுக்கும் உதவித்தொகை! நபிகளாரின் மனிதநேயப் பாதையில் பயணிப்போம் – ஜனாதிபதி பெரிய சூரிய மின் அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு! குழந்தைகள் பாதுகாப்பு விவகாரம் – மெட்டாவுக்கு பெரும் சிக்கல்! திபெத் முதல் நேபாளம் வரை பேரிடரின் கோரத்தாண்டவம்! பேரவெள்ளத்தால் பாரிய உட்கட்டமைப்பு சேதம்! இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! ரோபோக்களின் வேகம் மனிதர்களை மிஞ்சுகிறதா? இலங்கை விளையாட்டு வரலாற்றில் முதல்முறை – பயிற்சியாளர்களுக்கும் உதவித்தொகை! நபிகளாரின் மனிதநேயப் பாதையில் பயணிப்போம் – ஜனாதிபதி
உலகம்

பேரவெள்ளத்தால் பாரிய உட்கட்டமைப்பு சேதம்!

August 27, 2026 · National Tamil LK

நேபாள- திபெத் எல்லையைத் தாக்கிய திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த அனர்த்தத்தில் சிக்கி நேபாளத்தில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காணாமல் போனவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் அடங்குகின்றனர். 

இந்த அனர்த்தத்தில் திபெத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் 265 பேரைக் காணவில்லை என சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

நிலநடுக்கம் காரணமாகவே வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர். 

எனினும் மண்சரிவு காரணமாகவே இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. 

குறித்த அனர்த்தம் காரணமாக ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்துள்ளதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார். 

நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் திடீரென நேற்று வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதன்காரணமாக அந்த பகுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளும், ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். 

அதேநேரம் வௌ்ளம் காரணமாக பாரியளவில் உட்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›