பெரிய சூரிய மின் அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

விடுமுறைக் காலத்தில் மின்சாரத் தேவை குறைவாக உள்ளதன் காரணமாக, 300 கிலோவாட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட கூரை மேல் பொருத்தப்படும் சூரிய மின் அமைப்புகளைத் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யுமாறு தேசிய அமைப்பு இயக்குநகம் (பிரைவேட்) லிமிடெட் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அறிவிப்பின்படி, பாதிக்கப்பட்ட மாடி சூரிய மின் அமைப்புகள் ஆகஸ்ட் 27 முதல் ஞாயிறு வரை தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும்.
விடுமுறை நாட்களில் மின்சாரத் தேவை குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும், தேசிய மின்சார அமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் தேவைப்படுவதாலும் இந்தத் தற்காலிக நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் கீழ் வரும் கூரைமேல் சூரியசக்தி ஆலை இயக்குபவர்கள், குறிப்பிடப்பட்ட செயலிழப்புக் காலத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்




