LATEST
பேரவெள்ளத்தால் பாரிய உட்கட்டமைப்பு சேதம்! இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! ரோபோக்களின் வேகம் மனிதர்களை மிஞ்சுகிறதா? இலங்கை விளையாட்டு வரலாற்றில் முதல்முறை – பயிற்சியாளர்களுக்கும் உதவித்தொகை! நபிகளாரின் மனிதநேயப் பாதையில் பயணிப்போம் – ஜனாதிபதி ரந்தோலி பெரஹெரா – கண்டியில் விசேட பாதுகாப்பு திட்டம் அமுல்! அமைதி, கருணையின் செய்தியை உலகிற்கு வழங்கிய நபிகள் நாயகம்! மழை மற்றும் காற்று – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! பேரவெள்ளத்தால் பாரிய உட்கட்டமைப்பு சேதம்! இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! ரோபோக்களின் வேகம் மனிதர்களை மிஞ்சுகிறதா? இலங்கை விளையாட்டு வரலாற்றில் முதல்முறை – பயிற்சியாளர்களுக்கும் உதவித்தொகை! நபிகளாரின் மனிதநேயப் பாதையில் பயணிப்போம் – ஜனாதிபதி ரந்தோலி பெரஹெரா – கண்டியில் விசேட பாதுகாப்பு திட்டம் அமுல்! அமைதி, கருணையின் செய்தியை உலகிற்கு வழங்கிய நபிகள் நாயகம்! மழை மற்றும் காற்று – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
உள்ளூர்

இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

August 27, 2026 · National Tamil LK

நாட்டில் இன்றும் (27) சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அம்பாறை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories

Explore More ›