LATEST
மத்திய கிழக்கு பதற்றம் எண்ணெய் சந்தையை மீண்டும் உலுக்கியது! ஆசியக் கிண்ணம் வென்ற இந்தியா கிண்ணத்தை பெற மறுப்பு – பரிசளிப்பில் பெரும் சர்ச்சை! இன்றும் வானிலை மோசமடையும் வாய்ப்பு! ஜனநாயகத்தை காக்க செப்.24 போராட்டம் – சஜித் அறிவிப்பு! நெடுஞ்சாலை பாதுகாப்பில் புதிய கட்டுப்பாடு – ஆசனப்பட்டி கட்டாயம்! இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த விஜித ஹேரத் உத்தியோகபூர்வ விஜயம்! இலங்கையின் அந்நியச் செலாவணிக்கு பலம் சேர்க்கும் வெளிநாட்டு பணவரவு! AI அபாயங்களை சமாளிக்க அரசுகளும் நிறுவனங்களும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! மத்திய கிழக்கு பதற்றம் எண்ணெய் சந்தையை மீண்டும் உலுக்கியது! ஆசியக் கிண்ணம் வென்ற இந்தியா கிண்ணத்தை பெற மறுப்பு – பரிசளிப்பில் பெரும் சர்ச்சை! இன்றும் வானிலை மோசமடையும் வாய்ப்பு! ஜனநாயகத்தை காக்க செப்.24 போராட்டம் – சஜித் அறிவிப்பு! நெடுஞ்சாலை பாதுகாப்பில் புதிய கட்டுப்பாடு – ஆசனப்பட்டி கட்டாயம்! இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த விஜித ஹேரத் உத்தியோகபூர்வ விஜயம்! இலங்கையின் அந்நியச் செலாவணிக்கு பலம் சேர்க்கும் வெளிநாட்டு பணவரவு! AI அபாயங்களை சமாளிக்க அரசுகளும் நிறுவனங்களும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
உலகம்

AI அபாயங்களை சமாளிக்க அரசுகளும் நிறுவனங்களும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!

September 13, 2026 · National Tamil LK

செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளின் அபிவிருத்தி வேகத்தைக் குறைத்து, அவைகளைத் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என முன்னணி AI நிறுவனமான Anthropic-இன் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடை (Dario Amodei) தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

AI அபிவிருத்தியை நிறுத்துவது தொடர்பில் எந்தக் கேள்வியும் இல்லை என அவர் எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அது தொடர்பான அபாயங்கள் பாரதூரமானவை என்பதால், அவற்றுக்கு தீர்வு காண்பதற்கு நிறுவனங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக மூன்று முக்கிய கருத்துகளைக் கொண்ட திட்டத்தையும் அவர் முன்வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

AI மாதிரிகளை அபிவிருத்தி செய்யும் போதே சுயாதீன கண்காணிப்பை மேற்கொள்வது, ஒட்டுமொத்த AI துறைக்கும் பொருந்தக்கூடிய ஒழுங்குமுறை முறைமையை அறிமுகப்படுத்துவது மற்றும் உலகளாவிய ரீதியில் ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவது ஆகிய மூன்று யோசனைகளும் இதில் அடங்கும்.

இதற்கிடையில், AI தொழில்நுட்பத்தினால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து அண்மைக்காலமாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் மிகக் கடுமையான அபாயங்கள் குறித்து வெளியிடப்பட்ட சில கருத்துக்களில், எதிர்வரும் பத்தாண்டு காலத்திற்குள் AI தொழில்நுட்பத்தினால் மனிதகுலம் முற்றாக அழிவதற்கான வாய்ப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›