LATEST
மத்திய கிழக்கு பதற்றம் எண்ணெய் சந்தையை மீண்டும் உலுக்கியது! ஆசியக் கிண்ணம் வென்ற இந்தியா கிண்ணத்தை பெற மறுப்பு – பரிசளிப்பில் பெரும் சர்ச்சை! இன்றும் வானிலை மோசமடையும் வாய்ப்பு! ஜனநாயகத்தை காக்க செப்.24 போராட்டம் – சஜித் அறிவிப்பு! நெடுஞ்சாலை பாதுகாப்பில் புதிய கட்டுப்பாடு – ஆசனப்பட்டி கட்டாயம்! இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த விஜித ஹேரத் உத்தியோகபூர்வ விஜயம்! இலங்கையின் அந்நியச் செலாவணிக்கு பலம் சேர்க்கும் வெளிநாட்டு பணவரவு! AI அபாயங்களை சமாளிக்க அரசுகளும் நிறுவனங்களும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! மத்திய கிழக்கு பதற்றம் எண்ணெய் சந்தையை மீண்டும் உலுக்கியது! ஆசியக் கிண்ணம் வென்ற இந்தியா கிண்ணத்தை பெற மறுப்பு – பரிசளிப்பில் பெரும் சர்ச்சை! இன்றும் வானிலை மோசமடையும் வாய்ப்பு! ஜனநாயகத்தை காக்க செப்.24 போராட்டம் – சஜித் அறிவிப்பு! நெடுஞ்சாலை பாதுகாப்பில் புதிய கட்டுப்பாடு – ஆசனப்பட்டி கட்டாயம்! இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த விஜித ஹேரத் உத்தியோகபூர்வ விஜயம்! இலங்கையின் அந்நியச் செலாவணிக்கு பலம் சேர்க்கும் வெளிநாட்டு பணவரவு! AI அபாயங்களை சமாளிக்க அரசுகளும் நிறுவனங்களும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
உலகம்

மத்திய கிழக்கு பதற்றம் எண்ணெய் சந்தையை மீண்டும் உலுக்கியது!

September 14, 2026 · National Tamil LK

உலக சந்தையில் மீண்டும் இன்றைய தினம் (14) இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. 

சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் ஒன்று மூடப்பட்டமை, சவூதி அரேபியா மீதான புதிய ஹூதி தாக்குதல்கள் மற்றும் மத்திய கிழக்கில் கப்பல்கள் மீதான ஈரானியத் தாக்குதல்கள் காரணமாக இவ்வாறு சடுதியாக கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. 

அதற்கமைய ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் 3.03% உயர்ந்து பீப்பாய் ஒன்று 107.51 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. 

அதேநேரம் WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.72% உயர்ந்து 102.08 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது. 

ஈராக்கில் இருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால், உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவூதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் வெள்ளிக்கிழமை மூடப்பட்டதால், விநியோகத்திற்கான அபாயங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இன்று எண்ணெய் விலைகள் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்து சவூதி அரேபியா தனது ஏற்றுமதியை மாற்று வழியில் அனுப்ப உதவிய இந்த எண்ணெய் குழாயின் இழப்பு, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4% வரை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

Explore More ›