LATEST
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தீவிர கண்காணிப்பில்! உலக எரிபொருள் விலை உயர்வு; உள்நாட்டு விலையிலும் மாற்றம் சாத்தியம்! 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து! தொடர் மழையால் மகாவலி கங்கை தாழ்நிலங்களுக்கு எச்சரிக்கை! நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை மற்றும் பலத்த காற்று! பாதுகாப்பற்ற சாலைகளை மாற்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் புதிய ஒப்பந்தம்! தொடரை இழந்த இலங்கைக்கு இன்று இறுதி T20 சவால்! அனோஜன் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் அவசர முயற்சியில்! ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தீவிர கண்காணிப்பில்! உலக எரிபொருள் விலை உயர்வு; உள்நாட்டு விலையிலும் மாற்றம் சாத்தியம்! 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து! தொடர் மழையால் மகாவலி கங்கை தாழ்நிலங்களுக்கு எச்சரிக்கை! நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை மற்றும் பலத்த காற்று! பாதுகாப்பற்ற சாலைகளை மாற்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் புதிய ஒப்பந்தம்! தொடரை இழந்த இலங்கைக்கு இன்று இறுதி T20 சவால்! அனோஜன் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் அவசர முயற்சியில்!
உள்ளூர்

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை மற்றும் பலத்த காற்று!

September 20, 2026 · National Tamil LK

நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Stories

Explore More ›