மறு அறிவித்தல் வரை பாடசாலைகளுக்கு பூட்டு

நாடு முழுவதிலுமுள்ள அனைத்து பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதி கல்வியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.
அவற்றை மீள திறக்கும் தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
திட்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் நாட்டிலிருந்து இன்னும் நீங்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
Follow & Share




