LATEST
செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் சிறிய மாற்றம்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் சிறிய மாற்றம்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு
உள்ளூர்

ஒவ்வாமை பாதிப்புக்குள்ளாகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு

December 23, 2025 · Claude

ஒவ்வாமை பாதிப்புக்குள்ளாகி முல்லைத்தீவு மாவட்டத்தின் சிலாவத்தை வசிப்பிடமாக கொண்ட 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

கடந்த ஞாயிறு தினத்தன்று குறித்த சிறுமி மாட்டிறைச்சி உணவு உட்கொண்ட பின்னர் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து, சிறுமியின் தாயார் அவரை உடனடியாக தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார் ,பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முள்ளியவளை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் சிறுமிக்கு ஊசி ஒன்று செலுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், பேசிக்கொண்டிருந்த சிறுமி, அந்த ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, சிறுமி உயிரிழந்ததாக வைத்திய வட்டாரங்கள் அறிவித்துள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில்,சிறுமியின் இறப்புக்கு உண்மை காரணம் அறியாமல் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.

ஆகையால் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, பெற்றோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், இனிமேல் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

Explore More ›