LATEST
செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் சிறிய மாற்றம்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் சிறிய மாற்றம்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு
உள்ளூர்

தையிட்டி விகாரைக்கு எதிராக போராடியவர்களுக்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

January 2, 2026 · Claude

தையிட்டி விகாரைக்கு முன்பாக அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்ட வலி. வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அழைப்பு கட்டளை அனுப்பியுள்ளது.

தையிட்டி விகாரை முன்பாக கடந்த 21ஆம் திகதி அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் வாய் தர்க்கப்பட்டு , அமைதியின்மை ஏற்படுத்தப்பட்ட நிலையில் , வேலன் சுவாமி , வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி. நிரோஷ் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வலி. வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு எதிராக பலாலி போலிசார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் , குறித்த வழக்கு விசாரணைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›