அமெரிக்கா சீனா மோதல் தொடர்பில்- பகிரங்க அறிவிப்பு

அமெரிக்காவுடனான வேறுபாடுகளைக் களைந்துவிட்டு ஜோ பைடன் நிர்வாகத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

ஜோ பைடன் பதவியேற்ற பின் இரு நாடுகளுக்கிடையிலான உறவு வலுப்பெறுமென எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், பீஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ இதனை உறுதிப்படுத்தினார்.

இருநாடுகளுக்கான பொது நலன்களை மறந்துவிட்டுச் சீனாவை அமெரிக்கா கடுமையாக விமர்சித்ததாலேயே உறவு மோசமடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கொரோனா, பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம், இனச் சமத்துவம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக ஜோ பைடன் கூறியுள்ளதாகவும் வாங் இ சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கிடையில் வர்த்தகப் போர் மற்றும் கொரோனா விவகாரத்தால் மோதல் போக்கு ஏற்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை – தேர்தலுக்கு முன்னதாக சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க தான் விரும்புகிறேன் என ஜோ பைடன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது