கடன் பொறியா? இராஜதந்திர பொறியா? தடுமாறும் இலங்கை அரசு!

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்ட குவாட் உரையாடலில், சீனாவின் பொருளாதார- இராணுவ விரிவாக்கம் குறித்து பேசப்பட்டது. சீனாவை எப்படி மடக்குவது? என்பதாக அந்த உரையாடல் வெளி விரிந்துள்ளது.

அக்டோபர் 9 இல், சீன உயர்மட்ட அரசியல் குழுவினர் இலங்கை சனாதிபதி கோட்டாவைச் சந்தித்ததோடு, இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 15 இல் பிரதமர் மகிந்தாவை அலரி மாளிகையில் சந்தித்தார் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்ளே. இதைத்தான் இராஜதந்திர மூலோபாய ஓட்டம் என்பார்களோ!

அநேகமாக இலங்கைத் தீவினை மையமாகக் கொண்ட வல்லாதிக்க போட்டி நகர்வுகள், இம்மாத ஆரம்பத்திலிருந்தே வேகமாக நகரத் தொடங்கியதை காணலாம்.

சீனாவிற்கெதிராக கட்டமைக்கப்படும் புதிய அணியில், எவ்வாறு இலங்கையை உள்ளிழுப்பது என்கிற சிக்கலில் ‘குவாட்’ அணியினர் தடுமாறும் வேளையில், இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு கொழும்பு சென்றுள்ளார் அமெரிக்காவின் இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பயோ.