கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 582 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 582 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 882ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்ணை 38 ஆயிரத்து 59 ஆகப் பதிவாகியுள்ளது.

அவர்களில் 29 ஆயிரத்து 300 பேர் குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 7ஆயிரத்து 994பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.