அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியான அறிக்கை! இலங்கை தொடர்பில் கூறப்பட்டது என்ன?

ஸ்ரீலங்கா உட்பட பிராந்தியத்தில் உருவாகிவரும் சகாக்களின் சுதந்திரமான திறந்த ஒழுங்கமைப்பிற்கான பலத்தை அமெரிக்க அதிகரிக்கவேண்டும் என்று இந்தோ பசுபிக்கிற்கான அமெரிக்காவின் மூலோபாயங்கள் குறித்த ஆவணத்தில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

ஸ்ரீலங்கா உட்பட பிராந்தியத்தில் உருவாகிவரும் சகாக்களின் சுதந்திரமான திறந்த ஒழுங்கமைப்பிற்கான பலத்தை அமெரிக்க அதிகரிக்கவேண்டும்.

அதேபோன்று இந்தோபசுபிக்கில் சீனாவின் செல்வாக்கு குறித்தும் அதனை எதிர்கொள்வதற்கான வழிவகைகள் குறித்தும் கவனம் செலுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

இதற்கிடையில், சீனாவின் கைத்தொழில் கொள்கைகளும் நியாயமற்ற வர்த்தக கொள்கைகளும் சர்வதேச சந்தையையும் உலக போட்டித்தன்மையையும் பாதிப்பது குறித்து அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா தனது இராணுவ மற்றும் மூலோபாய நோக்கங்களை அடைவதை தவிர்ப்பதற்காக அமெரிக்கா தனது சகாக்கள் மற்றும் தன்னை போன்ற கொள்கை உடைய நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் தந்திரோபாயம் குறித்தும் அமெரிக்க ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியா அவுஸ்திரேலியா ஜப்பான் அமெரிக்காவை உள்ளடக்கிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவது குறித்தும் அந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.