பிரித்தானியாவில் கொடிய வைரஸ் தொற்றுக்கு பலியாகும் சிறுவர்கள்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

பிரித்தானியாவில் பரவும் பக்டீரியா Strep A தொற்றுக்கு இலக்காகி இதுவரை 6 சிறுவர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் சிறுவர் பள்ளிகளில் குறித்த பாக்டீரியா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதுடன் 6 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, நான்கு வயது சிறுவனொருவன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு அமைப்பான UKHSA  உறுதி செய்துள்ளதுடன், இதுவரை 6 பேர் Strep A பாக்டீரியா பாதிப்பால் உயிரிழந்துள்ளமையையும் உறுதி செய்துள்ளனர்.

பிரித்தானியாவில் கொடிய வைரஸ் தொற்றுக்கு பலியாகும் சிறுவர்கள்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Uk Child Dies From Wildfire Bacteria

இந்த நோய் தொற்று தொடர்பில் மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.

பக்டீரியா Strep A தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு சிகிச்சை முன்னெடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

 

நான்கு அல்லது ஐந்து நாட்களாக காய்ச்சல் விடாமல் நீடித்தால், அல்லது வேகமாக மூச்சு வாங்கினால் உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையை முன்னெடுக்க வேண்டும்.

 

தற்போது இந்த கொடிய வியாதி சிறார்களில் பரவலாக காணப்படுகிறது.இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானியா முழுவதும் இதுவரை 861 சிறார்கள் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு தொற்றின் தீவிரம் 670% அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

லிவர்பூலில் உள்ள மருத்துவமனையில் நான்கு வயது சிறுமி ஒருவர் நோய் தொற்றுக்குள்ளாகி வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகின்றார். 10 வயதுக்கு உட்பட்ட மேலும் இரு சிறார்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில்  7 நாட்களில் உயிரிழந்துள்ளனர்.

 

 

இருப்பினும் சிறுவர்கள் நோய் தொற்று காரணமாக இறந்தார்களா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.