வெளிநாட்டவர்களுக்கு பேரிடி – கனடாவில் வந்தது புதிய தடை

கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்து வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனடா அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வீடுகளின் மதிப்பு உயர்ந்ததால் இந்தத் தடை விதிக்கப்படவுள்ளது.

ஆனால், கனடாவில் குடியேறியவர்கள் மற்றும் நிரந்தரமாக வசித்து வரும் வெளிநாட்டவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான வெளிநாட்டவர்களும் கனடாவில், சொத்துக்களை வாங்கி குவித்துவரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.