யாழ். மாவட்டத்தில் முன்‍னெடுக்கப்படவுள்ள 8 திட்டங்கள் தொடர்பான குழுவின் தலைவராக சிவஞானம் நியமனம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டு திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 8 திட்டங்கள் தொடர்பில் இன்றைய தினம் (26) ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

குறித்த திட்டங்களுக்கான காணிகளை வழங்குவதற்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதி வழங்குமாறு நிறுவனத்தின் பணிப்பாளரால் கோரிக்கை விடுக்கப்பட்டபோது காணி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரினால் 8 திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவை தலைவர் சி.வி.கே. சிவஞானம், ஜனாதிபதியின் வடக்குக்கான இணைப்பாளர் மற்றும் அந்தந்த பிரதேச செயலர்கள் அடங்கிய குழுவை அறிக்கை சமர்ப்பிக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.