ஓட்ட பந்தய பயிற்சியில் ஈடுபட்ட மாணவன் மாரடைப்பால் சரிந்து வீழ்ந்து மரணம்

ஓட்டப் பந்தய பயிற்சியில் ஈடுபட்ட மாணவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்த நாக்ஸ் மேக்ஈவன் (வயது 14). என்ற மாணவனே இவவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவனாவான்.

ஓட்ட பந்தய பயிற்சியை மேற்கொண்டபோது
டேவிஸ் வெஸ்டர்ன் உயர்நிலை பள்ளியில் படித்து வந்த இந்த மாணவன், பயிற்சிக்காக ஓட்ட பந்தயம் உள்ளிட்டவற்றில் கலந்து கொள்வது வழக்கம். இதன்படி, 5 கி.மீ. ஓட்ட பந்தய பயிற்சியை ஈவன் மேற்கொண்டபோது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளான்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அவசரகால சிகிச்சை குழுவினர் உடனடியாக சென்றுள்ளனர். எனினும், ஈவனை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

இரட்டை நிலைப்பாட்டுடன் சிறிலங்கா அரசாங்கம் : சர்வதேச சமூகத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இரட்டை நிலைப்பாட்டுடன் சிறிலங்கா அரசாங்கம் : சர்வதேச சமூகத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்த சம்பவத்திற்கு பள்ளியின் முதல்வர் ஜிம்மி அர்ரோஜோ இரங்கல் தெரிவித்து உள்ளார். ஈவன் அந்த பகுதியில் பரவலாக நன்மதிப்பை பெற்றிருப்பதுடன், தன்னார்வலராகவும் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

இறுதி சடங்கிற்காக நிதி திரட்டும் குடும்ப நண்பர்
ஈவனின் இறுதி சடங்கிற்காக குடும்ப நண்பர் ஒருவர் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு, ரூ.55 லட்சம் சேர்த்துள்ளார்.

அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன் கூடைப்பந்து விளையாட்டுக்கான பயிற்சியின்போது, காலிப் ஒயிட் (வயது 17) என்ற மாணவர் சரிந்து விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.