இன்று பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் இன்று சீரற்ற காலநிலை நிலவக்கூடும்.
சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும். மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் சில இடங்களில் மழை எதிர்பார்ப்பு.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், மொனராகலை, அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Follow & Share


