மழையுடனான வானிலை எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
அதேபோல், பிற்பகல் 2 மணிக்குப் பிறகு அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் உட்பட மாத்தளை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
Follow & Share




