LATEST
அனக் கிரகடாவ் எரிமலை தொடர்ந்து 2வது நாளாக வெடிப்பு! யானையின் ஆரோக்கியத்திற்காக கதிர்காம தேவஸ்தானம் எடுத்த முடிவு! சுமண ரத்ன தேரர் கைது செய்யப்பட்டார்! நாமல் விவகாரம்; வெலிக்கடைக்கு சென்ற குடும்பத்தினர்! கட்டிடம் இடிந்து பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்! இன்று முதல் டிசம்பர் 4 வரை பாடசாலை கல்வி நடவடிக்கைகள்! UN மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீண்டும் கவனத்தில்! செப்டம்பரின் முதல் 4 நாட்களில் 872 டெங்கு நோயாளர்கள்! அனக் கிரகடாவ் எரிமலை தொடர்ந்து 2வது நாளாக வெடிப்பு! யானையின் ஆரோக்கியத்திற்காக கதிர்காம தேவஸ்தானம் எடுத்த முடிவு! சுமண ரத்ன தேரர் கைது செய்யப்பட்டார்! நாமல் விவகாரம்; வெலிக்கடைக்கு சென்ற குடும்பத்தினர்! கட்டிடம் இடிந்து பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்! இன்று முதல் டிசம்பர் 4 வரை பாடசாலை கல்வி நடவடிக்கைகள்! UN மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீண்டும் கவனத்தில்! செப்டம்பரின் முதல் 4 நாட்களில் 872 டெங்கு நோயாளர்கள்!
விளையாட்டு

4 விக்கெட்டுக்களால் இலங்கை மகளிர் அணி அசத்தல்!

September 7, 2026 · National Tamil LK

ஆசிய மகளிர் கிண்ணத் தொடரின் நேற்றைய (6) பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சோபனா மொஸ்டாரி 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். 

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் சமூதி பிரபோதா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

இந்நிலையில் 115 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. 

இலங்கை அணி சார்பில் ஹர்சிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். 

இந்த வெற்றியின் மூலம் ஆசிய கிண்ண அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இலங்கை அணி உறுதி செய்துள்ளது.

Related Stories

Explore More ›