4 விக்கெட்டுக்களால் இலங்கை மகளிர் அணி அசத்தல்!

ஆசிய மகளிர் கிண்ணத் தொடரின் நேற்றைய (6) பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சோபனா மொஸ்டாரி 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் சமூதி பிரபோதா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில் 115 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
இலங்கை அணி சார்பில் ஹர்சிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஆசிய கிண்ண அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இலங்கை அணி உறுதி செய்துள்ளது.




