பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய எச்சரிக்கை!

தென்மேற்குப் பருவப்பெயர்ச்சிக் காற்றின் வேகம் மற்றும் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இக்காலப்பகுதியில் பயணங்களை மேற்கொள்ளும் போதும், மலைப்பாங்கான மற்றும் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் மேலதிக பாதுகாப்புக் கவனங்களைச் செலுத்துவது அவசியமாகும்.
Follow & Share



