LATEST
அனக் கிரகடாவ் எரிமலை தொடர்ந்து 2வது நாளாக வெடிப்பு! யானையின் ஆரோக்கியத்திற்காக கதிர்காம தேவஸ்தானம் எடுத்த முடிவு! சுமண ரத்ன தேரர் கைது செய்யப்பட்டார்! நாமல் விவகாரம்; வெலிக்கடைக்கு சென்ற குடும்பத்தினர்! கட்டிடம் இடிந்து பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்! இன்று முதல் டிசம்பர் 4 வரை பாடசாலை கல்வி நடவடிக்கைகள்! UN மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீண்டும் கவனத்தில்! செப்டம்பரின் முதல் 4 நாட்களில் 872 டெங்கு நோயாளர்கள்! அனக் கிரகடாவ் எரிமலை தொடர்ந்து 2வது நாளாக வெடிப்பு! யானையின் ஆரோக்கியத்திற்காக கதிர்காம தேவஸ்தானம் எடுத்த முடிவு! சுமண ரத்ன தேரர் கைது செய்யப்பட்டார்! நாமல் விவகாரம்; வெலிக்கடைக்கு சென்ற குடும்பத்தினர்! கட்டிடம் இடிந்து பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்! இன்று முதல் டிசம்பர் 4 வரை பாடசாலை கல்வி நடவடிக்கைகள்! UN மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீண்டும் கவனத்தில்! செப்டம்பரின் முதல் 4 நாட்களில் 872 டெங்கு நோயாளர்கள்!
உள்ளூர்

பிற்பகல் 2 மணிக்குப் பின் மழைக்கு வாய்ப்பு!

September 7, 2026 · National Tamil LK

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும். 

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். 

இதேவேளை சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஒகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கைக்கு அண்மையிலுள்ள அட்சரேகைகளுக்கு நேரே உச்சம் கொடுக்கின்றது. 

இன்றைய தினம் (07) நண்பகல் 12:08 மணிக்கு காலி, அங்குலுகஹ, இமதுவ, தெலிஜ்ஜவில, யடியன மற்றும் தங்காலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Stories

Explore More ›