இளைஞர்களை ஏமாற்றும் நிலை நீடிக்காது – செல்வம் அடைக்கலநாதன்

அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் இளைஞர்களைத் தன் பக்கம் ஈர்ப்பதற்காகப் பல்வேறு தந்திரோபாயங்களைக் கையாண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
முந்தைய காலங்களில் எத்தகைய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் அதில் முக்கிய அங்கமாக இருந்த முஸ்லிம் சமூகம், தற்போதைய அரசில் பிரதி அமைச்சுப் பதவிகளுடன் ஒடுக்கப்பட்டிருந்த போதிலும், தம் சமூகத்தின் நன்ம கருதியே இளைஞர்கள் வாக்களித்திருந்தனர்.
எனினும், திட்டமிட்ட ரீதியில் போதைப்பொருட்கள் பரப்பப்பட்டு இளைஞர்களின் போராட்டச் சிந்தனைகள் மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இளைஞர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை நன்கு அறிந்து செயற்பட்டாலும், அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்புகளும் ஆதரவு அலையும் தற்போது குறையத் தொடங்கியுள்ளது.
அரசாங்கம் இளைஞர்களை ஏமாற்ற முனைகிறது என்ற எண்ணம் தற்போது இளைஞர்கள் மத்தியில் மேலெழுந்து வருவதால், இந்த நிலைமை நீண்ட காலத்திற்கு நீடிக்காது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
விழுதுகள் நிகழ்ச்சியின் முழு காணொளியை காண சூரியனின் யூடியூப் தளத்தை பார்வையிடவும்.




