LATEST
யோஷித–கரன்னாகொடவுக்கு எதிரான ஊழல் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு! நீதிபதிகளின் சம்பளத்தில் APIT வரி அறவிடுவது சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு! சர்வதேச மாணவர்கள் குடும்பத்தினரை அழைத்து வர அவுஸ்திரேலியாவில் புதிய கட்டுப்பாடு! ஆசிய விளையாட்டுக்கு 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு! நற்சான்றிதழ் விண்ணப்ப பிரச்சினைகளுக்கு காவல்துறை தலைமையகத்தின் புதிய உதவி எண்கள்! 48 மணிநேர பணிப்புறக்கணிப்பிலும் அலுவலக தொடருந்துகள் வழமைபோல் சேவையில்! மட்டக்குளி கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு! மழையுடன் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் – முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்! யோஷித–கரன்னாகொடவுக்கு எதிரான ஊழல் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு! நீதிபதிகளின் சம்பளத்தில் APIT வரி அறவிடுவது சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு! சர்வதேச மாணவர்கள் குடும்பத்தினரை அழைத்து வர அவுஸ்திரேலியாவில் புதிய கட்டுப்பாடு! ஆசிய விளையாட்டுக்கு 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு! நற்சான்றிதழ் விண்ணப்ப பிரச்சினைகளுக்கு காவல்துறை தலைமையகத்தின் புதிய உதவி எண்கள்! 48 மணிநேர பணிப்புறக்கணிப்பிலும் அலுவலக தொடருந்துகள் வழமைபோல் சேவையில்! மட்டக்குளி கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு! மழையுடன் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் – முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!
உள்ளூர்

யோஷித–கரன்னாகொடவுக்கு எதிரான ஊழல் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

September 17, 2026 · National Tamil LK

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர்,கருத்திற்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கை, முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவிட்டது.

தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாத பின்னணியில், பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷவை பிரித்தானியாவின் ரோயல் கடற்படை பயிற்சி முகாமிற்கு பயிற்சிக்காக அனுப்பியதன் மூலம் ஊழல் புரிந்துள்ளதாக குற்றம்சாட்டி கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›