LATEST
யோஷித–கரன்னாகொடவுக்கு எதிரான ஊழல் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு! நீதிபதிகளின் சம்பளத்தில் APIT வரி அறவிடுவது சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு! சர்வதேச மாணவர்கள் குடும்பத்தினரை அழைத்து வர அவுஸ்திரேலியாவில் புதிய கட்டுப்பாடு! ஆசிய விளையாட்டுக்கு 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு! நற்சான்றிதழ் விண்ணப்ப பிரச்சினைகளுக்கு காவல்துறை தலைமையகத்தின் புதிய உதவி எண்கள்! 48 மணிநேர பணிப்புறக்கணிப்பிலும் அலுவலக தொடருந்துகள் வழமைபோல் சேவையில்! மட்டக்குளி கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு! மழையுடன் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் – முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்! யோஷித–கரன்னாகொடவுக்கு எதிரான ஊழல் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு! நீதிபதிகளின் சம்பளத்தில் APIT வரி அறவிடுவது சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு! சர்வதேச மாணவர்கள் குடும்பத்தினரை அழைத்து வர அவுஸ்திரேலியாவில் புதிய கட்டுப்பாடு! ஆசிய விளையாட்டுக்கு 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு! நற்சான்றிதழ் விண்ணப்ப பிரச்சினைகளுக்கு காவல்துறை தலைமையகத்தின் புதிய உதவி எண்கள்! 48 மணிநேர பணிப்புறக்கணிப்பிலும் அலுவலக தொடருந்துகள் வழமைபோல் சேவையில்! மட்டக்குளி கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு! மழையுடன் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் – முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!
உள்ளூர்

நற்சான்றிதழ் விண்ணப்ப பிரச்சினைகளுக்கு காவல்துறை தலைமையகத்தின் புதிய உதவி எண்கள்!

September 17, 2026 · National Tamil LK

காவல்துறை நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெற்றுக்கொள்வது தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

24 மணி நேரமும் செயற்படும் இந்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக காவல்துறை தலைமையகத்தின் விசேட செயல்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு, நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிக்க முடியும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இணையவழியில் காவல்துறை நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கை தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கணினி கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை, பிரதேச காவல்துறை நிலையங்கள் ஊடாக நற்சான்றிதழைப் பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், 071 859 59 46, 071 859 59 47 மற்றும் 071 859 59 48 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related Stories

Explore More ›