யாழ். மானிப்பாய் பிரதேசபை வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மானிப்பாய் பிரதேசபை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை இன்று (06) செவ்வாய்க்கிழமை மானிப்பாய் பிரதேச சபையின் தலைவர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் சபையில் சமர்ப்பித்தார்.

இதன்போது வரவு செலவுத் திட்டம் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் பின்னர் பாதீடு வாக்களிப்புக்கு விடப்பட்டது. பாதீட்டினை 23 உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். அதனையடுத்து பாதீடு நிறைவேற்றப்பட்டது.

28 உறுப்பினர்களை கொண்ட சபையில் இன்றையதினம் 23 உறுப்பினர்கள் மாத்திரம் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.