இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்ட பட்ஜெட்: பதவியிழக்கும் தவிசாளர்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிரதேச சபைத் தவிசாளர் பதவி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில், 8 உறுப்பினர்கள் ஆதரவும் 12 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

அதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவர் ஆதரவாக வாக்களித்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் 4 பேர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் 5பேர், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினர் உள்ளடங்கலாக 12 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.