அடுத்த ஏழு நாட்கள் பட்டிணியில் போடப்படும் மக்கள்! முடக்கல் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

நீண்ட நத்தார் வார இறுதியில் மேற்கு மாகாணத்தில் நுழையவோ அல்லது வெளியேறவோ, மாகாணத்திற்குள் ஊரடங்கு உத்தரவினையோ அல்லது முடக்கலை விதிக்கவோ, பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கவோ விரும்பவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், சர்வதேசத்தால் இனம் காணப்பட்ட தமிழின படுகொலையாழியுமான இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எவ்வாறாயினும், பண்டிகை வார இறுதிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் நிலைமை மறுபரிசீலனை செய்யப்படும்.

தற்போதுள்ள நிலைமை தொடர்ந்தால், எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது. எல்லாம் பொது மக்களின் கைகளிலேயே உள்ளது.