நடிகர் சிம்புவின் அடுத்த திரைப்படம் என்ன தெரியுமா?

ஈஸ்வரன், மாநாடு படங்களை தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை நார்தன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தின் தமிழ் ரீமேக்கையும் அவரே இயக்கி வந்தார். தமிழில் சிம்பு, கௌதம் கார்த்திக் ஆகியோர் நடித்தனர்.

முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்தாமல் கிடப்பில் போட்டனர்.

அண்மையில் இப்படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும், சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் வெளியிட்டுள்ளது. அதன்படி தங்களது 20ஆவது படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் நடிக்க உள்ளதாகவும் கிருஷ்ணா இயக்க உள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 24 ஆம் திகதி இப்படத்தின் தலைப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.