2021இல் மனித குலத்துக்கு பேரழிவு! உலகையே அதிர வைக்கும் “பாபா வாங்கா”

2021 ஆம் ஆண்டு வலிமையான டிராகன் ஒட்டுமொத்த மனித குலத்தையே கைப்பற்றும் என கண் தெரியாத பெண் பாபா வாங்கா கணிப்பு வைரலாகி வருகிறது.

பல்கேரியன் நாட்டைச் சேர்ந்த, கண் தெரியாத இவர் 5 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார்.

இவர் 50 ஆண்டுகளில் 100இற்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறியுள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவை பலித்தும் உள்ளன, நடந்தும் உள்ளன.

2016 ஆண்டு மிகப்பெரிய ஐ எஸ் போர் தொடங்கும், ஐரோப்பியர்களுக்கு எதிராக இரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவர். அவர்கள் 2043 ஆம் ஆண்டு ரோமை மைய புள்ளியாக கொண்டு தங்கள் ஐ எஸ் ஆட்சியை நிறுவுவார்கள் என கூறினார்.

அதேபோல அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார். கூறியது போலவே அத்தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது.

அமெரிக்காவின் 44ஆவது அதிபராக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்று கணித்தார். அதே போல், ஒபாமா அதிபராக பதவியேற்றார்.

பின்னர், 2016ஆம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும் எனவும் கணித்தார்.

இதைத் தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி இரசாயன தாக்குதலை நடத்துவார் என கணித்தார், அதுவும் நடந்தது.

இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பை பற்றி பலரும் எதிர்பார்க்கின்றனர்.

2019 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இருந்தாலும் பாபாவை பின்பற்றுவோர் அவரது கணிப்பை நம்புகின்றனர்.

ஆனால் 2020ஆம் ஆண்டு குறித்த அவரது கணிப்புகளில் சில நடந்து உள்ளன.

2020ஐ பொறுத்தவரை, வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்கும் ஐரோப்பிய மக்களுக்கும் கெட்டநேரம் தான்

2020 இல் ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சி நடக்கும்.

மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேட்கும் திறன் இழந்து மனநலம் பாதிக்கப்படலாம் அல்லது உயிரிழக்கலாம் என்று கூறி இருந்தார்.

ஐரோப்பா காணாமல் போகும் என்றும் பாபா கூறியிருக்க, பாபா கூறியது பிரெக்ஷிட்டை மனதில் வைத்துதான் என்றும் மக்கள் கருதுகின்றனர்.

அத்துடன் 2020இல் ஐரோப்பாவை தீவிரவாதிகள் இரசாயன ஆயுதங்களுடன் தாக்குவார்கள் எனவும் கூறி இருந்தார்.

2020ஆம் ஆண்டின் இறுதி தருவாயில் உள்ளோம். வரப்போகும், 2021 ஆம் ஆண்டாவது சிறப்பாக அமைய வேண்டும் என்பது ஒட்டுமொத்த மனித இனத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையலி, 2021 ஆம் ஆண்டு குறித்தும் வருங்காலம் பற்றியும் பாபா வங்கா கூறிய கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

2021 ஆம் ஆண்டில் இந்த உலகம் சில பேரழிவுகளை சந்திக்கும் என்றும் அமெரிக்கவின் 45 ஆவது அதிபர்(டொனால்ட் ட்ரம்ப் ) மர்ம நோயால் பாதிக்கப்படுவார் என்றும் கூறியுள்ளார்.

அடுத்த 200 ஆண்டுகளுக்குள் மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது வங்காவின் கணிப்பின் படி இன்னும் 200 ஆண்டுகளில் மனிதன் வாழ தகுந்த இடமாக பூமி இருக்காது என்கிறார்.

ஒரு வலிமையான டிராகன் ஒட்டுமொத்த மனித குலத்தையே கைப்பற்றும் என்றும், அதில் மூன்று இராட்சதர்கள் ஒன்று கூடுவர் என்றும், கணித்து கூறியுள்ளார்.

டிராகன் என பாபா வங்கா குறிப்பிட்டது சீனாவாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.