வவுனியாவில் மேலும் 16 கொரோனா தொற்றாளர்கள்

வவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா – பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதி முடிவுகள் இன்று (15) காலை வெளியாகியது.

அதனடிப்படையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணிபுரியும் 13 பேருக்கும் கண்டிவீதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையை சேரந்த 3 பேருக்கும் தொற்றிருக்கின்றமை உறுதி செய்யப்பட்டது.

குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகர்பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 170 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த மேலும் 500 பேரின் பி.சி.ஆர் முடிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் நகரின் முடக்கம் தளர்த்தப்படும் என பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்தார்.