பதவியேற்றதும் – உலக நாடுகளுக்கு பைடன் விடுத்துள்ள அறிவிப்பு

உலகத்துடனான எங்கள் கூட்டணிகளை மீண்டும் சரிசெய்வோம் – திருத்திக்கொள்வோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

ஜோ பைடன் இன்று தனது பதவியேற்பு உரையில் உலக நாடுகளிற்கான செய்தியை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

எல்லைக்கு அப்பால் இருப்பவர்களிற்கான எனது செய்தி இது – அமெரிக்கா சோதனைக்குள்ளாக்கப்பட்டு மீண்டும் வலுவானதாகியுள்ளது.

நாங்கள் எங்கள் பலத்தின் மூலமாக மாத்திரம் தலைமை தாங்கப்போவதில்லை. மாறாக எங்கள் முன்னுதாரணம் மூலமாக தலைமை தாங்குவோம்.

அமைதி, முன்னேற்றம், பாதுகாப்பு ஆகிய விடயங்களில் நம்பகத்தன்மை மிக்க வலுவான சகாவாக நாங்கள் விளங்குவோம் என்றார்.