சிலியில் கொவிட்-19 தொற்றினால் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சிலியில் எட்டு இலட்சத்து மூவாயிரத்து 9பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றின் மூலம் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் சிலியில் இதுவரை 20ஆயிரத்து 126பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 549பேர் பாதிக்கப்பட்டதோடு 84பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆயிரத்து 306பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 574பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஏழு இலட்சத்து 60ஆயிரத்து 577பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.