கொங்கோ அரசிடம் கொரோனா தடுப்பூசி கேட்டு ஜனாதிபதி கடிதம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு உதவிடுமாறு கொங்கோ அரசாங்கத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்.

கொங்கோ அரசின் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ, மேலதிகமாக உள்ள எஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கின்றார்.

கொங்கோ அரசின் கொழும்பிலுள்ள தூதரகம் மூலமாக இந்தக் கடிதப் பரிமாற்றம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடிதத்தை வழங்க ஜனாதிபதியே தூதரகத்திற்கு நேரடியாக சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.