35 நாட்களாக காணாமல் போன 15 வயது யுவதி முள்ளியவளையில் போலீஸ் நிலத்தில் முறைப்பாடு!

முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய கிறிஸ்துராசா மிதுசிகா என்பவரை கடந்த 35 நாட்களாக காணவில்லை என் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

படத்தில் உள்ள குறித்த சிறுமி தொடர்பில் விபரங்களை அறிந்தவர்கள் 0766758057 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.