தமிழர் பகுதியில் இடம்பெற்ற பெரும் சோகம்; பிறந்த குழந்தையை பார்க்கச்சென்ற தந்தை பரிதாப பலி!

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் ஒரு குழந்தையின் தந்தை புவனசிங்கம் சுவேகாந்தன்(29) என்பவர் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்று அதிகாலை மட்டக்களப்பு வைத்தியசாலையில் தனக்கு கிடைத்த குழந்தையினை பார்ப்பதற்கு திக்கோடை பிரதேசத்தினூடாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே வீதியினூடாக எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த அவர், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட்டார்.

அதன் பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த குடும்பஸ்தர் உயரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் பற்றிய விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.