இன அழிப்பு தலைவர் கோட்டபாயவை கொலைசெய்ய ஜோன்ஸ்டன் சூழ்ச்சி!

கோட்டாபய ராஜபக்சவை படுகொலை செய்வதற்காக தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்துவந்தவர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோதான் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து விவாதம் நாடாளுமன்றில் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்திற்கு 2 மணிநேரம் வழங்கப்பட்டுள்ள போதிலும் மேலுமொரு மணித்தியாலம் வழங்குமாறு எதிர்கட்சியினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஆளுந்தரப்பு நிராகரித்தது.

இதன்போது எழுந்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கும் இடையே கருத்துமோதல் ஏற்பட்டபோதே ராஜித மேற்கண்டவாறு தெரிவித்தார்.