ரிஷாத்துக்கு நவம்பர் 25 வரை விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிர்வரும் நவம்பர் 25 வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று வழங்கியது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பொதுமக்கள் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு முன்னாள் அமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.