தடுப்பு முகாம்கள் உடனடியாக மூடப்பட்டு அனைவரையும் விடுதலை செய் !அதிர்ந்தது சிட்னி டவுன் ஹோல் .

அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்தற்றை கோரிய அனைவருக்கும் நிரந்தர வதிவிட விசா வழங்கப்படவேண்டும் எனவும் ,தடுப்பு முகாம்கள் உடனடியாக மூடப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும் ,
அடைக்கலம் கோருவோர் மனிதாவிமானமாக நடத்தப்பட்டு அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்க பட வேண்டும் மற்றும் 10 வருடங்களுக்கு மேலாக வசிப்பவர்களது அந்தஸ்து கோரிக்கை சாதகமாக பரிசீலிக்கபட்டு நிரந்தர விசா வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட இப் பேரணியில் மிக பெருமளவான மக்கள் பங்குபற்றி தமது ஆதரவினை தெரிவித்தனர் .

இப் பேரணி இன்று ஜூலை 24 ஞாயிறு மதியம் 1 மணிக்கு Sydney Town Hall இல் ஆரம்பமாகியது குறிப்பிடத்தக்கது .முன்னோடியாக
ஆஸ்திரேலியாவின் ஏதிலிகளுக்கு எதிரான கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .