பிரிகேடியர் தீபனின் தந்தை காலமானார்

தமிழீழ விடுதலைப்புலிகளின் வட போர்முனைக் கட்டளைத் தளபதியாக இருந்த மாவீரர் பிரிகேடியர் தீபன் மற்றும் திருகோணமலை மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த மாவீரர் லெப். கேணல் கில்மன் ஆகியோரின் தந்தை கந்தையா வேலாயுதபிள்ளை காலமானார்.

யாழ்., தென்மராட்சி, கொடிகாமம் – வரணி பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட அவர் சுகயீனம் காரணமாக இன்று காலமானார்.

6 பிள்ளைகளின் தந்தையான ஆவார்.

அன்னாரின் அந்திம நிகழ்வுகள் குறித்து பின்னர் அறியத்தரப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.