ஒரு நாட்டை முழுமையாக அழிக்கும் அளவிற்கு சுனாமி ஏற்படும் அபாயம்: டைம் ட்ராவலரின் அதிர்ச்சி தகவல்கள்

சமூக ஊடகத்தில் டைம் ட்ராவலர் என தன்னை அறிமுகப்படுத்தியுள்ள எனோ அலரிக் என்பவர் எதிர்காலத்தில் நடந்தேறும் நிகழ்வுகள் குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்துவருகின்றார்.

12 ஆண்டுகளாக மாயமான பயணிகள் விமானம் ஒன்று 2022 டிசம்பர் 12ம் திகதி பத்திரமாக தரையிறங்கும் எனவும், அந்த விமானப் பயணிகள் எவருக்கும் வயது மூப்பு பாதித்திருக்காது எனவும் கடந்த காலங்களிலும் பல எச்சரிக்கைகளை விடுத்திருந்தார்.

டிசம்பர் மாதத்தின் நான்கு நாட்கள்
இந்நிலையில் தற்போது அவர் இந்த (டிசம்பர்) மாதத்தின் நான்கு நாட்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.

டிசம்பர் மாதத்தில் நான்கு நாட்கள் முக்கியம் என்றும் அந்த நாட்களில் முக்கிய நிகழ்வுகள் சில நடக்கும், அவை நான் ஒரு டைம் ட்ராவலர் என்பதை நிரூபிக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஒரு நாட்டை முழுமையாக அழிக்கும் அளவிற்கு சுனாமி ஏற்படும் அபாயம்: டைம் ட்ராவலரின் அதிர்ச்சி தகவல்கள்

எனோ அலரிக், டிசம்பர் 8, 12, 20 மற்றும் 25 ஆகிய நாட்களே முக்கிய நிகழ்வுகள் சில நடக்கும் நாட்கள் என கூறியுள்ளார்.

குறிப்பாக, கிறிஸ்துமஸ் தினத்தன்று மிக முக்கிய நிகழ்வொன்று நடக்க இருப்பதாக எச்சரித்துள்ளதுடன் அன்று பாதுகாப்பாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால், டிசம்பர் 8 மற்றும் 12 ஆகிய திகதிகளில் அப்படி ஒன்றும் நடக்காததால், 20 மற்றும் 25ஆம் திகதிகளில் ஏதாவது நடக்குமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

டைம் ட்ராவலரின் எச்சரிக்கைகள்
ஒரு நாட்டை முழுமையாக அழிக்கும் அளவிற்கு சுனாமி ஏற்படும் அபாயம்: டைம் ட்ராவலரின் அதிர்ச்சி தகவல்கள்

இதேவேளை கடந்த காலத்தில் பல சம்பவங்கள் தொடர்பில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏலியன்கள் பூமிக்கு படையெடுக்கும் நாள் தொலைவில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் 2023 மே மாதத்திற்குள் 5 முக்கிய நிகழ்வுகள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த ஐந்து முக்கிய நிகழ்வுகளையும் நினைவில் நிறுத்துங்கள் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.

ஐந்து முக்கிய நிகழ்வுகள்
அந்த பட்டியலில் உலகில் 10 பேர்கள் ஒரே நாளில் சூரியனின் உச்ச சக்தியை பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். இது நவம்பர் 14, 2022ல் நடக்கும் எனவும், ஆனால் தாமதமாக வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக பூமியின் பிரதிபலிப்பான ஒரு கிரகத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அடையாளம் காணும் என தெரிவித்துள்ளார்.

12 ஆண்டுகளாக மாயமான பயணிகள் விமானம் ஒன்று 2022 டிசம்பர் 12ம் திகதி பத்திரமாக தரையிறங்கும் எனவும், அந்த விமானப் பயணிகள் எவருக்கும் வயது மூப்பு பாதித்திருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாட்டை முழுமையாக அழிக்கும் அளவிற்கு சுனாமி ஏற்படும் அபாயம்: டைம் ட்ராவலரின் அதிர்ச்சி தகவல்கள்

2023 பெப்ரவரி மாதம் நான்கு இளைஞர்கள் அரிய கருவி ஒன்றை கைப்பற்றுவார்கள் எனவும், அதன்வாயிலாக விசித்திர காட்சிகளை காண்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக 2023 மே மாதம் இதுவரை கண்டிராத மாபெரும் சுனாமி ஒன்று ஏற்படும் எனவும், கலிபோர்னியாவை மொத்தமாக அது தாக்கும் எனவும், சான் பிரான்சிஸ்கோ அழிந்துபோகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.