அடுத்த 3 நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு

நாளை (ஜனவரி-14) முதல் டிசம்பர் – 16 ஆம் திகதி திங்கட்கிழமை வரையான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, குறித்த நாட்களில் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்துக்கள் தைத்திருநாள் பண்டிகையை கொண்டாடவுள்ள நிலையில், குறித்த தினத்திலும் 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.